தேவதைக்கு சரியான ஆண்பால் என்ன?
”எந்த ஒரு குத்துசண்டைவீரனின் வாழ்க்கையோடு ஒப்பிட்டாலும் ஜேம்ஸ் ப்ரடோக்கை போல ஒரு மனிதனை பார்க்கமுடியாது” என்கிற எழுத்தாளர் டேமன் ருன்யெனின் வார்த்தைகளோடு தொடங்குகிறது, படம்.
1928 குத்துசண்டை போட்டியில் ஒரு தலைசிறந்த வீரனாக, தொடர்ந்து பத்துமுறை நாக்அவுட் முறையில் ஜெயித்த, இப்படி ஒரு தவிர்க்கமுடியாத இடத்தில் இருக்கிறான், ப்ரடோக். ஆனால் அதே குத்துசண்டையினால் கையில் ஏற்பட்ட முறிவின் காரணமாய் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை. தொடர்ந்து நாட்டில் நிலவும் கடுமையான வேலையில்லா திண்டாட்டம், இரண்டும் சேர்த்து அடுத்த ஐந்து வருடங்களில் அவன் வாழ்க்கையை சூனியமாக ஆக்கிப்போகிறது. தொடர்ந்து குத்துசண்டையில் கலந்துகொள்ள அவனுக்கு அழைப்புகள் வந்தாலும் கலந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறான். ஒருபுறம் குடும்ப சூழ்நிலை மேலும் இறங்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் தண்ணீருக்கும், மின்சாரத்திற்குமான பாக்கியைக்கூட கட்டமுடியாமல் போகிறது. பால்பாக்கியால் வீட்டிற்கு வரும் பாட்டில்பாலும் தடைபடுகிறது. மூன்று குழந்தைகளுடன், ப்ரடோக்.
அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் பளுதூக்கும் வேலைக்கு போகிறான். ஆனால் அங்கும் ஒரு நாளைக்கு பத்து பேருக்குமேல் வேலைக்கு எடுப்பதில்லை, ஆனால் அங்கு இவனோடு சேர்த்து தினமும் ஐம்பது பேராவது காத்திருக்கிறார்கள், வேலைக்காக. அதிர்ஸ்டம் இருந்தால் வேலை என்கிற நிலை, அன்றும் அவன் பெயர் அழைக்கப்படாததால் வெருத்து வீடு திரும்புகிறான், நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒண்ணரை லட்சமாக உயர்ந்தது, என்ற செய்தியுடன் நாளிதழ் தெருவில் கிடக்கிறது. வீட்டிற்குவரும் ப்ரடோக்கிடம் அவனது மகள், ”அண்ணன் திருடிட்டான்” என்கிறாள் உள்ளே ஆட்டிறைச்சி துண்டு மேசையில் இருக்கிறது. அவன் மனைவி மே “நான் எவ்வளவோ கேட்டுட்டேன் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறான்” என்கிறாள். ப்ரடோக் தன் மகனிடம் அதை எடுத்துகொண்டு என்னோடு வா என்கிறான். அதே கடையில் கொண்டு கொடுத்துவிட்டு கடைக்காரரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்புகின்றனர். வழியில் மகன் சொல்கிறான் “ என்னுடைய நண்பனை அவனது மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்”
“ஏன்”
”அவங்க அப்பா அம்மாவால அவனுக்கு சரியான உண்வுகளை கொடுக்க முடியவில்லை”தன் மகனின் இந்த வார்த்தையில் கல்ங்கிபோகிறான் ப்ரடோக். இருந்தும் மகனிடம் “ ஆம், நீ சொல்வது நிஜம்தான், இங்கும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது, நம்மை போன்றே இங்கு ஏராளமான மக்கள் சாப்பாட்டுக்கும் கஷ்ட்டப்படும் நிலையில்தான் இருக்கிறார்கள், ஆனால் திருடுவதற்கு இதை காரணமாக்க்கூடாது. என்ன நடந்தாலும், நம்முடையதல்லாத எதையும் நீ எடுக்க்க்கூடாது, புரிகிறதா? எனக்கு சத்தியம் செய்து கொடு” என்கிறான்.
சத்தியமா இனி இப்படி செய்யமாட்டேன், ஜோ.
”அப்பாவும் உனக்கு சத்தியம் செய்கிறேன், என்ன நிலைமை வந்தாலும் உங்களை எங்கும் அனுப்பிவிடமாட்டேன்” ப்ரடோக்.
அன்றிரவு, ஒரு போட்டியில் கலந்துகொண்டால் 75 டாலர் கிடைக்கும் என்பதால் மீண்டும் களமிறங்குகிறான். அவனுடைய மேனேஜராக, ப்ரடோக்கை சண்டைக்கான ஆயத்தங்களைசெய்யும்போது அவனது கை எலும்பின் முறிவு இன்னும் ஆறாமல் இருப்பதை கவனிக்கிறார். ஏன் என்னிடம் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை, இப்படியே எப்படி விளையாடமுடியும்? என்கிறார். ”என்னால் முடியும், நான் சுத்தி கடனை வாங்கி வைத்திருக்கிறேன். என்னால் முடிக்கவேண்டிய கடன் நிறைய இருக்கிறது, நான் அவசியம் ஜெயித்தே ஆகனும்” என்கிறான். ஆனால் சண்டையின்போது அவனது கையில் மேலும் மூன்று முறிவுகள் ஏற்படுகிறது. போட்டி நட்த்துபவர் நீ சரியாக சண்டைபோடாத்தால் பார்வையாலர்களின் அதிருப்தியை பெற்றோம். இனி நீ குத்துசண்டைக்கு லாயக்கில்லை என்று அனுப்பிவிடுகிறார். போட்டியும் தடைபடுகிறது. விரக்தியோடு வீடு திரும்புகிறான். சம்பளமும் இல்லை.
விதி அவனை நாலப்பக்கமும் சுழற்றி அடிக்கிறது. ஒருகட்ட்த்தில் மனைவி குழந்தைகளை தனது தங்கையின் வீட்டிற்கு அனுப்பிவைக்கலாம், நானும் ஏதாவது வேலை செய்கிறேன், இங்கு நிலைமை சரியானது குழந்தைகளை திரும்ப அழைத்த்க்கொள்ளலாம், என்கிறாள். ப்ரடோக் என் கை உடைந்திருக்கிறது, ஆனால் மனது அப்படியில்லை, நான் ஷுவிற்கு பாலிஷ் போட்டாவது உங்களை காப்பாற்றுவேன், என்கிறான். ஆனால் இப்படி நிலையில் உங்களை வைத்திருப்பதற்குஎன்னை மன்னித்துவிடு, என்று கதறுகிறான்.
ஆனால் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே போகிறது, மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குழந்தைகள் உடல் நிலை மோசமாகிறது. வேலைதேடி ப்ரடோக் வெளியே சென்றிருக்கும் நேரம், மே குழந்தைகளை அவளின் தங்கை வீட்டில் விட்டு வருகிறாள். வீட்டிற்கு வரும் ப்ரடோக் குழந்தைகள் இல்லாதது கண்டு மனமுடைகிறான், நான் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். என்னால் என் குழந்தைகளை காப்பாற்றமுடியும் என்று கத்திவிட்டு வெளியேறுகிறான்
மேலும் படிக்க..!
நன்றி : முரளிகுமார் பத்மநாபன்
