உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”
அவசியம் படிக்க வேண்டிய அருமையான, உபயோகமான பதிவு.
சிவாஜியால் ஒரு சிவாஜியை உருவாக்க முடியவில்லை.
நெப்போலியனால் ஒரு நெப்போலியனை உருவாக்க முடியவில்லை
குழந்தை சுடப்படாத ஈரக்களிமண் .
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பழமொழி குழந்தைகளுக்காக அல்ல. அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான அறிவுரை இது.
அன்னையும் பிதாவும்.
அப்பாவும் பையனுமாக குற்றாலத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கே பல இடங்களில் “திருடர்கள் ஜாக்கிரதை” “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்டுள்ளது.
இதை வாசித்த அந்த சிறுவன் தந்தையிடம் கேட்கிறான் “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதியிருந்தால் மட்டும் திருடர்கள் பயந்து விடவா போகிறார்கள். தந்தை பதில் கூறுகிறார். “இந்த எச்சரிக்கை திருடர்களுக்காக அல்ல. திருடர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மை போன்ற சுற்றுலா பயணிகளுக்குக் கொடுக்கப்படும் அறிவுரை”. எனவே திருடர்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இது போலவே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பழமொழி குழந்தைகளுக்காக அல்ல.
அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான அறிவுரை இது. குழந்தைகள் பெற்றோரை தெய்வம் போல பார்க்கிறார்கள். ஒரு வழிகாட்டியாக (Role Model) கவனிக்கிறார்கள்.
ஆகவே நாம் நமக்காக மட்டுமல்ல நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக குறையற்ற நல்ல பழக்க வழக்கங்களை, ஒழுங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்
நமது ஒவ்வொரு செயல்களையும் நமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஒவ்வொரு வார்த்தைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து பின்பற்றுகிறார்கள்.
நாம் அவர்களுக்கு என்ன சொல்கிறோம் என்ன அறிவுரை கூறுகிறோம் என்பதை அல்ல, என்ன செய்கிறோம் என்பதையே அவர்கள் பார்க்கிறார்கள் பின்பற்றுகிறார்கள்.
“என் வாழ்வே என் செய்தி” என்ற அண்ணல் காந்தி கூறியது போல நமது செயல்களே நம்மையறியாமல் நம்மை அவர்கள் பின்பற்ற காரணமாக அறிவுரையாகிறது. எனவே நமது நடவடிக்கைகள் சரியானதாகவும் ஒழுக்கமானதாகவும், திறமையானதாகவும், வழிகாட்டும்படியாகவும் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..!
இந்தப் பக்கம் இளையாங்குடி குரலுக்கு சொந்தமானவை...!

